மூடு

திட்டங்கள்

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

சுற்றுலா ஆபரேட்டர் பதிவு அமைப்பு

ஹோம் ஸ்டே/படுக்கை மற்றும் காலை உணவு வழங்குநர்கள், முகாம் தளங்களை நடத்துபவர்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும் கேரவன் பார்க் / கேரவன் டூர் ஆபரேட்டர்கள் பதிவு செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹோம்ஸ்டே/படுக்கை மற்றும் காலை உணவு வழங்குநர்கள்: வீட்டில் உள்ள 1 முதல் 3 அறைகள் ஹோம்ஸ்டேவின் கீழ் பதிவு செய்யலாம் மற்றும் 4 முதல் 6 அறைகள் படுக்கை மற்றும் காலை உணவு வழங்குநர்களின் கீழ் பதிவு செய்யலாம் முகாம் தள ஆபரேட்டர்கள்: முகாம் தள ஆபரேட்டர்கள் இங்கே பதிவு செய்யலாம் அட்வென்ச்சர் டூரிஸம் ஆபரேட்டர்கள் மற்றும் : சாகசப் பூங்காக்கள், நீர் விளையாட்டுகள்,…

வெளியிடப்பட்ட தேதி: 19/04/2023
விவரங்களை பார்க்க

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம்

சிறு பழ பயிர்கள்: (ரம்புட்டான், லிச்சி, பெர்சிமோன், அவகாடோ, கிவி, பேஷன் பழம் போன்றவை) ஒரு எக்டருக்கு ரூ.30000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. பாரம்பரிய பழம் மற்றும் காய்கறி சாகுபடி திட்டம், ஒரு எக்டருக்கு ரூ.15000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. வறண்ட நில பயிர்கள் (நாவல், நெல்லி, புளி, முதலியன) ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. காய்கறி விதை கிட் விநியோகம் (கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, பாகற்காய், தக்காளி, கொத்தவரை), ஒரு கிட்டுக்கு ரூ.10 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 கிட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும்…

வெளியிடப்பட்ட தேதி: 28/09/2020
விவரங்களை பார்க்க

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்

வெங்காய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. பந்தல்: நிரந்தர பந்தல் கட்டமைப்பை அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.200000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்: கீரை வகைகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.2500-ம், வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் தக்காளிக்கு ஒரு எக்டருக்கு ரூ.3750-ம், முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்-க்கு ஒரு எக்டருக்கு ரூ.5000-ம் மானியமாக வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் / குத்தகைக்கு விடப்பட்ட நிலம் (10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை) இருக்க வேண்டும்….

வெளியிடப்பட்ட தேதி: 28/09/2020
விவரங்களை பார்க்க

மானாவாரி நில மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணைய அமைத்தல்

எக்டர் பரப்பளவில், 50% மானியம் ரூ.60000/- வீதம் வழங்கப்படுகிறது. தேனீ அலகுகள், நிரந்தர மண்புழு உரக்கூடம், நாட்டு கோழி இனங்கள், செம்மறி ஆடுகள், பால் மாடு/எருமை, நடவுச்செடிகள்/விதைகள் வழங்கப்படுகின்றன. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் ஒரு பயனாளிக்கு 1 எக்டருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். சிறு விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பயனாளி ஏற்கனவே ஒரு பால் மாடு / எருமை வைத்திருந்தால், அவருக்கு கூடுதல் மாடு வழங்கப்படும், அவரிடம் ஏற்கனவே இரண்டு மாடுகள் / எருமைகள் இருந்தால், பயனாளி இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது. எருமை / மாடு / ஆடு / செம்மறி ஆடு ஆகியவற்றை…

வெளியிடப்பட்ட தேதி: 28/09/2020
விவரங்களை பார்க்க

புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கத்திரிக்காய், மஞ்சள், முட்டைக்கோஸ், தக்காளி, மா, சிவப்பு மிளகாய் ஆகிய பயிர்களுக்கு காப்பீட்டு திட்டமானது RPMFBY கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்தால் இயற்கை பேரழிவுகள் காரணமாக பயிர் சேதங்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (RPMFBY) கவனம் செலுத்தப்பட்டது. மா பயிர்களுக்கு கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம், கெலமங்கலம், ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, தளி, வேப்பனபள்ளி மற்றும் மத்தூர் வட்டாரங்களும், வாழை பயிர்களுக்கு காவேரிப்பட்டிணம் மற்றும் வேப்பனப்பள்ளி வட்டாரங்களும், உருளைகிழங்கு பயிர்களுக்கு கெலமங்கலம்,…

வெளியிடப்பட்ட தேதி: 28/09/2020
விவரங்களை பார்க்க

கூட்டு பண்ணையம்

கூட்டு பண்ணையத்தின் கருத்து என்னவென்றால், ஒரு சிறிய பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை அடையாளம் கண்டு 20 விவசாயிகளுடன் விவசாயிகள் ஆா்வலா் குழுக்கள் (FIG) அமைப்பது. 5 FIG கள் 100 விவசாயிகளுடன் உழவர் உற்பத்தியாளர் குழுவில் (FPG) ஒருங்கிணைக்கப்படும். கூட்டு சாகுபடி, கடன் வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகளை அணுக உள்ளீடுகளை கூட்டாக வாங்குவது போன்றவற்றை FIG மற்றும் FPG ஊக்குவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 FIG-கள் மற்றும் 30 FPG-கள் கூட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 2020-21 நிதியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் FPG-யின் திட்ட அமலாக்கத் திட்டத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஒவ்வொரு…

வெளியிடப்பட்ட தேதி: 28/09/2020
விவரங்களை பார்க்க

பிரதான் மந்திரியின் வேளாண்மை நுண்ணிர் பாசன திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ், பாசன நீரை திறம்பட பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக, நுண்ணீா் பாசனம் அமைப்பதை ஊக்குவிக்கவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்குவதன் மூலம் நுண்ணீா் பாசன வசதியை அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 எக்டர் வரை நிதி உதவி பெற முடியும். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நுண்ணிர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயனாளிக்கு கிடைக்கும் மொத்த நிதி உதவி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 55%…

வெளியிடப்பட்ட தேதி: 28/09/2020
விவரங்களை பார்க்க

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம்-தேசிய தோட்டக்கலை இயக்கம்

புதிய பரப்பு விரிவாக்க திட்டம் கலப்பின காய்கறிகளின் சாகுபடி (தக்காளி) – அரசு தோட்டக்கலை பண்ணைகளில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.20000/எக்டா் வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அடா் நடவு மா சாகுபடி – ஒரு எக்டருக்கு ரூ. 9840/-. மலர் பயிர் சாகுபடி: சாமந்தி பயிரிட ஒரு எக்டருக்கு ரூ. 16000/- மற்றும் சம்பங்கி சாகுபடிக்கு பின்னேற்பு மானியத் தொகை விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.60000/- வீதம் வழங்கப்படுகிறது. மிளகாய் சாகுபடி- ஒரு எக்டருக்கு ரூ.12000/- வீதம் வழங்கப்படுகிறது. கொய் மலர் சாகுபடி- ஒரு எக்டருக்கு ரூ. 40000/-வீதம் பட்டியலினத்தவா் பெண்களுக்கு மற்றும் ஒரு எக்டருக்கு…

வெளியிடப்பட்ட தேதி: 28/09/2020
விவரங்களை பார்க்க

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் 11.10.2014ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் http://saanjhi.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் கிராமங்களில் அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தி, மாதிரி கிராமங்களில் செயல்படுத்தி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராம ஊராட்சியே இத்திட்டசெயலாக்கத்தின் அடிப்படை அலகாகும். சமவெளிப்பகுதிகளில் மக்கள் தொகை 3000 முதல் 5000 வரையும், மலைப்பகுதி மற்றும் பழங்குடி கிராமங்கள் எனில் மக்கள் தொகை 1000 முதல் 3000 வரையும் உள்ள கிராம ஊராட்சியை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்டங்களில் இந்த அலகு அளவுக்கு மக்கள் தொகை…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

தேசிய ரூர்பன் திட்டம்

மத்திய அமைச்சகத்தால் “ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்” திட்டம் 16.09.2015 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு 06.11.2015 முதல் செயல்படுத்தி வருகிறது. மேலும் இத்திட்டம் தற்போது “நேஷனல் ரூர்பன் மிஷன்” என அழைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தும் பொருட்டு இந்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகள் தொகுப்பு கிராம ஊராட்சிகளாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 300 கிராம ஊராட்சிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தி திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க