மூடு

தேசிய ரூர்பன் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

மத்திய அமைச்சகத்தால் “ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்” திட்டம் 16.09.2015 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு 06.11.2015 முதல் செயல்படுத்தி வருகிறது. மேலும் இத்திட்டம் தற்போது “நேஷனல் ரூர்பன் மிஷன்” என அழைக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தும் பொருட்டு இந்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகள் தொகுப்பு கிராம ஊராட்சிகளாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 300 கிராம ஊராட்சிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தி திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு 2018 முதல் 2021 வரை 3 ஆண்டுகளுக்கு பணிகள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள்.

  1. அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி
  2. பாகலூர்
  3. பெலத்தூர்
  4. ஈச்சாங்கூர்
  5. நந்திமங்கலம்
  6. சேவகானப்பள்ளி
  7. தும்மனப்பள்ளி