மூடு

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம்

தேதி : 28/09/2020 - | துறை: தோட்டக்கலை

  • சிறு பழ பயிர்கள்: (ரம்புட்டான், லிச்சி, பெர்சிமோன், அவகாடோ, கிவி, பேஷன் பழம் போன்றவை) ஒரு எக்டருக்கு ரூ.30000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • பாரம்பரிய பழம் மற்றும் காய்கறி சாகுபடி திட்டம், ஒரு எக்டருக்கு ரூ.15000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • வறண்ட நில பயிர்கள் (நாவல், நெல்லி, புளி, முதலியன) ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • காய்கறி விதை கிட் விநியோகம் (கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, பாகற்காய், தக்காளி, கொத்தவரை), ஒரு கிட்டுக்கு ரூ.10 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 கிட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் / குத்தகைக்கு விடப்பட்ட நிலம் (10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை) இருக்க வேண்டும்.
  • விவசாயிகள் வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை / குடும்ப அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
  • நடவுப் பொருள்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவினங்களை விவசாயிகளே மேற்கொள்ள வேண்டும்.
  • நிதி ஒதுக்கீடு பொது பிரிவினருக்கு 79.843 சதவீதமும், SC பிரிவினருக்கு 19.147 சதவீதமும், ST பிரிவினருக்கு 1.01 சதவீதமும் மற்றும் பெண்களுக்கு மொத்தம் 30 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது.
  • காய்கறிகளுக்கு 2 எக்டர் வரை மற்றும் பழங்களுக்கு 4 எக்டர் வரை இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
  • நீரில் கரையக்கூடிய உரங்கள், தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உயிர் உரங்கள் போன்றவை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
  • விவசாயி அந்தந்த பகுதிக்கு ஏற்ற பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • மானியத் தொகையை விட நடவுப் பொருள்களின் விலை அதிகமாக இருந்தால், அதற்குண்டான தொகையை விவசாயிகளே செலுத்த வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.
  • வட்டாரங்களில் பயனாளியின் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியுடன் முன்னுரிமை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

பயனாளி:

அனைத்து விவசாயிகளும்

பயன்கள்:

மானியம்

விண்ணப்பிப்பது எப்படி?

உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.