திட்டங்கள்
சேவை வகை வாரியாக வடிகட்டி
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டமானது தமிழக அரசால் 2011-12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டமானது அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் 100 சதவிகிதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஊரக பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழ்மையில் வாழும் மக்களுக்கு வீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நன்மைகள் அலகு தொகை – ரூ.2.10 இலட்சம் ஒரு வீட்டிற்கு -…
தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய் திட்டம்)
குக்கிராமங்களில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கண்டறியப்படும் அடிப்படைத் தேவைகளை தாய் திட்ட நிதியிலிருந்தும், இதர திட்டங்கள் மற்றும் இதர துறை திட்டங்கள் மூலமும் நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும் மேற்கொள்ளப்படும் பணிகள் குக்கிராமம் குறித்த அடிப்படை வசதிகளின் விவரங்களான குடிநீர் விநியோகம் (மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறுமின்விசை பம்புகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள், கைப்பம்புகள்), தெருவிளக்குகள், தெருக்கள் மற்றும் சந்துகள், இடுகாடு / சுடுகாடு> அரசு / உள்ளாட்சி கட்டடங்கள்> அரசு / உள்ளாட்சி பள்ளி கட்டடங்கள்> சிறுகுளங்கள் மற்றும் ஊரணிகள்>…
அம்மா பூங்கா
ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள் அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும்…
அம்மா உடற்பயிற்சி கூடம்
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன்படி ஊரகப் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் போன்ற தேவையான வசதிகளை வழங்குதல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ஊரக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.50 கோடி மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா உடற்பயிற்சி கூடத்தின் நன்மைகள் ஊரக பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும், தங்களது…
மல்பரி நடவு மானியம்
ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ.52,500/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 2 மல்பரி தோட்டத்தில் எடுக்கப்பட்ட முழுஉருவ புகைப்படம் தலா 2 சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்
தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு வழங்கப்படும் மானியங்கள்
நிலை 1 (1500 ச.அடிக்குமேல்) = 82,500/- நிலை 2 (1000 முதல் 1500 ச,அடிக்குள்) = 87,500/- நிலை 3 (800 முதல் 1000 ச,அடிக்குள்) = 63,000/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக தனி புழுவளர்ப்புமனை குறிப்பிட்டுள்ள அளவிடுகளின்படி அமைத்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3 மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் (அடிமட்டம், ஜன்னல் அளவு, முழுஅளவு,உள்பகுதி தலா 2,) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம். சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்…
நவீன புழு வளர்ப்பு தளவாட பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்குத்தல்
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புழுவளர்ப்பு மேற்கொள்ள புழுவளர்ப்பு தாங்கிகள் 1200 ச. அடிக்கு மேல் அமைத்தல்வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2 சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள் ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள் தாங்கிகள் அமைத்ததற்கான இரசிது, அசல் ஆவணங்கள்
சொட்டுநீர் பாசனம் அமைத்தல்
சிறு,குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.50,000/- பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22,500/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.12,500/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3 மல்பரி தோட்டத்தில் (லேட்டர்ல், பில்டர்) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2 சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை,குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா…
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் (வலை மற்றும் பரிசல்) மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர் / மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டும், அவர்களின் வருமானத்தினை அதிகப்படுத்தும் எண்ணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த சுமார் 5000 மீனவர்களுக்கு வலை மற்றும் பரிசல்கள் 50 சதவீதம் மான்யத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினை சார்ந்த பயனாளிகள், அந்தந்த வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர்களை நேரில் சென்று…
பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு திட்டம்
உள்நாட்டு மீன்உற்பத்தி கடந்த ஆண்டுகளில் பெரும்பாலும் இந்திய பெருங்கெண்டைகள் மற்றும் இதர வகை சிறு கெண்டைகளை சார்ந்து இருந்து வந்தது.இவ்வகை கெண்டை ரகமீன்கள் நீர்நிலைகளில் முழு வளர்ச்சி அடைய அதிக காலம் எடுக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் நீர்நிலைகள் அனைத்தும் நீர் இருப்பு திறன் கொண்டுள்ளதாலும்,மாவட்டத்தின் மீன் உற்பத்தி திறனினை பெருக்கும் நோக்கத்திலும், தமிழ்நாடு மீன்வளத்துறை குறுகிய காலத்தில் அதிக எடை வளரக்கூடிய கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு விரலிகளை கிருஷ்ணகிரி மீன்பண்ணையில் உற்பத்தி செய்து மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை…