மூடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது. 01/04/2008 முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நோக்கம்

  • ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி
  • இந்த வேலை வாய்ப்பின் மூலம் பொது சொத்துக்களை உருவாக்குதல்

புதிய அணுகுமுறைகள்

மொத்தம் உள்ள 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம்தர் வங்கி கணக்கில் மின்னணு நிதி மாற்றம் மூலமாக அரசு கணக்கிலிருந்து நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ஊதியத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 09.11.2016 முதல் 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம் வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் கைபேசி செயலி (Mobile Application) மூலம் பணியின் விவரங்களை பூகோள குறியிடுதல் (Geo – Tagging) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

2017-18-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பணிபுhpயும் தொழிலாளர்களுக்கு மின்னனு வருகை பட்டியல் (e-MR) முறையில் பயனாளிகள் (தனியாகவோ அல்லது குழுவாகவோ) பிரதி செவ்வாய்கிழமை தோறும் வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இணையத்திலிருந்து பெறப்படும் மின்னனு வருகைப்பட்டியலின்படி வேலைக் கேட்பு அளித்த பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் புதன்கிழமை வரை பணி வழங்கப்படும். இதனால் பணிகள் எவ்வித பாரபட்சமும் இன்றி, எளிமையான முறையில் வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரிய முறையில் பணிகளை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு “சீரிய நிர்வாகம்“ (Good Governance Activities) என்ற தலைப்பின் கீழ் இத்திட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமாpக்கப்படுகிறது.

ஒவ்வொரு பணித்தளத்திலும் பணி தொடர்பான தகவல் பலகை (Citizen Information Board) மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக சுவர் விளம்பரம் (Wall Painting) ஊராட்சி மன்ற அலுவலகம் / கிராம சேவை கட்டிடத்தில் எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று வரும் பணிகளை பற்றி பொதுமக்கள் தொpந்து கொள்வதுடன் ஒளிவு மறைவற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், விளம்பரங்களின் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் பயனடைய ஏதுவாக உள்ளது.

ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் ஊதியத்தொகை வழங்குதல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் கைபேசி செயலி மூலம் பணியின் விவரங்களை பூகோள குறியிடுதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

2017-18-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மின்னனு வருகை பட்டியல் முறையில் பயனாளிகள் (தனியாகவோ அல்லது குழுவாகவோ) பிரதி செவ்வாய்கிழமை தோறும் வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இணையத்திலிருந்து பெறப்படும் மின்னனு வருகைப்பட்டியலின்படி வேலைக் கேட்பு அளித்த பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் புதன்கிழமை வரை பணி வழங்கப்படும். இதனால் பணிகள் எவ்வித பாரபட்சமும் இன்றி எளிமையான முறையில் வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரிய முறையில் பணிகளை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு “சீரிய நிர்வாகம்“ என்ற தலைப்பின் கீழ் இத்திட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமாpக்கப்படுகிறது.

ஒவ்வொரு பணித்தளத்திலும் பணி தொடர்பான தகவல் பலகை மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக சுவர் விளம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம் / கிராம சேவை கட்டிடத்தில் எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று வரும் பணிகளை பற்றி பொதுமக்கள் தொpந்து கொள்வதுடன் ஒளிவு மறைவற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது. மேலும் விளம்பரங்களின் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் பயனடைய ஏதுவாக உள்ளது.

பணித்தளத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அசம்பாவிதத்தின் போது முதலுதவி மேற்கொள்ள முதலுதவி பெட்டிகள் மொத்தம் 672 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

333 ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தூய்மை காவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான தகுதிகள்

  • 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • அந்த ஊராட்சிக்குள் குடியிருத்தல் வேண்டும்.
  • குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும்.
  • குடும்பத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து உதவியாளா்களும் பதிவு செய்து வேலை அட்டை பெற்று கொள்ளலாம்.
  • எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பிலாலான வேலைகளையும் செய்வதற்கு விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.
  • ஆண் / பெண் இருபாலருக்கும் வேலை வழங்கப்படும்.
  • பயனாளிகள் அனைவரும் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்