மூடு

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

23.12.1993 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் இத்திட்டம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் இத்திட்டமானது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இத்திட்டத்தின் முதல் வழிகாட்டு நெறிமுறைகள் பிப்ரவாp 1994-ல் வெளியிடப்பட்டது. இதில் இத்திட்டத்தின் கருத்து செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியன தொpவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அக்டோபர் 1994-ல் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைசியாக ஜுன் 2016-ல் திருத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கமானது பாராளுமன்ற உறுப்பினர் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், ஆரம்பக்கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், சாலைப்பணிகள் மற்றும் இதர பணிகளில் முக்கியமானவற்றை தேர்வு செய்து செயல்படுத்த பாpந்துரைக்க வேண்டும்.

இத்திட்ட ஆரம்ப காலமான 1993-94-இல் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ரூ.50.000 இலட்சமாக ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியானது 1994-95 இல் ரூ.1.000 கோடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் 1998-99-இல் ரூ.2.000 கோடியாக உயர்த்தப்பட்ட இத்தொகுதி நிதியானது 2011-12 நிதியாண்டு முதல் ரூ.5.000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரூ.5.000 கோடியில் ரூ.10.000 இலட்சம் நிர்வாக செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.