மூடு

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பகுதி வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பின்வரும் நடைமுறைகளால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்திட கீழ்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  • 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் வீதம் 2663 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வீடுதோறும் குப்பைகள் சேகாpக்கப்படுகின்றன.
  • 300 வீடுகளுக்கு ஒரு மூன்று சக்கர வண்டிவீதம் 2111 வண்டிகள் வழங்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம்பிரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
  • 333 ஊராட்சிகளில் 910 தரம் பிரிக்கும் மையங்கள் மூலமாக மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன.
  • 1820 குப்பைகுழிகளில் மக்கும் குப்பைகள் இடப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. 910 மக்காத குப்பைகள் சேகாpப்பு மையத்தில் ஒருங்கிணைப்பு மூலம் குழிகளில் இடப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுகிறது.
  • மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளை 2 குப்பை அரைக்கும் இயந்திரங்கள் மூலமாக அரைக்கப்பட்டு 57 சாலைகளுக்கு 109.621 கி.மீ வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. (கிருஷ்ணகிரி வட்டாரம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி மற்றும் ஓசூர் வட்டாரம் கொத்த கொண்டப்பள்ளி ஊராட்சிகளில் பிளாஸ்டிக் அரைக்கும் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன.)
  • 62210 கி.கி. மக்கிய உரத்தினை விவசாயிகளுக்கு விற்பனை செய்ததின் மூலம் ரூ.80755/- ஐ (1 கிலோ ரூ.1.50 பைசா வீதம்) சம்மந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது.
  • மக்காத மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை விற்பனை செய்ததில் ரூ.43457/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
  • தினசரி நாளொன்றுக்கு ஊரக பகுதிகளில் 4 முதல் 6 டன்கள் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
  • 4694 குப்பைத்தொட்டிகள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு குப்பைகளை சேகரிக்கப்படுகிறது.
  • தினசரி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை மாவட்ட அளவில் இணையதளம் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.