மூடு

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்

மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைத்தாக்கள், ஆஷுர்கானாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம் செயல்படுத்தப்பட்டு, இவ்வாரியத்தின் மூலம் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது நிறைவு செய்தும் 60 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் முஸ்லிம் மதத்தைச் சோந்து உலமாக்கள் மற்றம் பணியாளாகள் நல வாரியத்தில் உள்ளவாகள் மட்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான…

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டம் பற்றிய விளக்கம்

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கிறித்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மைய அரசின் கீழ்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிப்படிப்பு – 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளி மேற்படிப்பு – 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தகுதி மற்றும் வருவாய் அடிப்படை – தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்…

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பின்வரும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனிநபர் கடன் திட்டம் சுய உதவி குழுக்கள் மூலம் சிறுகடன் வழங்கும் திட்டம் கல்விக் கடன் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் சிறுபான்மையினா வகுப்பைச் சோந்தவாகள் மட்டும் பயன்பெற தகுதியானவாகள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பின்வரும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது காலக்கடன் திட்டம் கறவை மாடு (ஆவின்) சிறுகடன் திட்டம் (ஆண்களுக்கு) புதிய பொற்காலத் திட்டம் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோந்தவாகள் பயன்பெறத் தகுதியானவாகள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

நரிக்குறவர் நல வாரியம்

நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இது தவிர தொழில் தொடங்குவதற்கு மானிய உதவியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தனியாகத் தொழில் தொடங்க பதிவு செய்த உறுப்பினருக்கோ அல்லது அவரைச் சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினருக்கோ அதிக பட்சமாக ரூ.7500 (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) முழு மானியமாக நரிக்குறவர் நல வாரியம் மூலம்…

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

விலையில்லா தேய்ப்பு பெட்டி

சலவைத் தொழில்புரியும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு சுயதொழில் செய்து வருமானம் ஈட்டிட விலையில்லா சலவைப் பெட்டிகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் 1) பயனாளி மிபிவ இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ம் ஆகும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

விலையில்லா தையல் இயந்திரம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் சுயமாக தொழில் செய்து வருமானத்தை ஈட்டி பொருளாதார நிலையை மேம்படுத்திட விலையில்லா தையல் இயந்திரங்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் பயனாளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 20 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாகவும், தையல் கலை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் பயனாளிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 -ம் ஆகும்.சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை மூலம் தையல் இயந்திரங்கள் பெற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான…

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

விடுதிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளும், 16 மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளும், 1 சிறுபான்மையினர் நல விடுதியும் சேர்த்து மொத்தம் 43 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றுள் கல்லூரி மாணவியர் விடுதி 5 மற்றும் கல்லூரி மாணவர் விடுதி 3 ஆகியவையும் அடங்கும். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் விடுதிகளில் சேர்ந்து பயிலலாம். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேற்படி பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் தங்கி பயில உரிய பள்ளி, கல்லூரி விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல…

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்

மேல்நிலைப் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் உரிய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெறத் தகுதி பெற்றவர்கள் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் தமிழக அரசால் வழங்கப்படும் மிதிவண்டிகள் சம்மந்தப்பட்ட பள்ளித்…

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க

மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல்

கிராமப்புறங்களிலுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் தங்களது தொடக்கக் கல்வியினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.500-ம் 6-ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1000-மும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியர்கள் பெறத் தகுதி பெற்றவர்கள் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் இத்தொகையினை…

வெளியிடப்பட்ட தேதி: 21/06/2018
விவரங்களை பார்க்க