மூடு

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டமானது தமிழக அரசால் 2011-12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டமானது அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகும்.

  • இத்திட்டம் 100 சதவிகிதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
  • ஊரக பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழ்மையில் வாழும் மக்களுக்கு வீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நன்மைகள்

  • அலகு தொகை – ரூ.2.10 இலட்சம்
  • ஒரு வீட்டிற்கு – ரூ.1.80 இலட்சம்
  • சூரிய மின்கலம் அமைக்க- ரூ. 0.30 இலட்சம்
  • வீடுகட்ட தேவையான நிலப்பரப்பு – 300 சதுர அடி

பயனாளி:

கிராமப்புற பகுதி மக்கள்

பயன்கள்:

சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு