மூடு

தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்

| துறை: சுகாதாரம்

வாரந்திர இரும்புச்சத்து மாத்திரை மற்றும் போலிக் அமிலம் திட்டம் அடிப்படையில் இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை சுகாதாரத்திட்டம் சமுதாயம் சார்ந்த வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள்.

சக கல்வியாளர்களை தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்

ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரம் மக்களுக்கு ஒரு சமுதாய நல்வாழ்வு ஊக்குநர் இருப்பார். அவ்ஊக்குநர் மற்றும் பள்ளி ஆசிரியர் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சக கல்வியாளர்களை தேர்வு செய்யப்படும்.

நான்கு சக கல்வியாளர்களில் இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களது வயது பதிநான்கு முதல் பத்தொன்பது வரை இருக்க வேண்டும். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

தகுதிகள்

10 முதல் 19 வயது வரையில் உள்ள குழந்தைகள் அனைவரும் தகுதியானவர்கள்.

இச்சேவை சமுதாய நல மையம் மற்றும் வட்டார ஆராம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும். இச்சேவைகள் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை

  • சத்துணவு, பாலியல் மற்றும் இனப்பெருக்கம்
  • சுகாதாரக்கல்வி
  • தொற்றா நோய்கள்
  • போதைப் பொருள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
  • பாலியல் சார்ந்த தொந்தரவுகள்

வளர் இளம் பருவத்தினர் நல சிகிச்சை பிரிவில் கொடுக்கப்படும்

நம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2017-18ல் மொத்தம் 4076 வளர் இளம் பருவத்தினர் (அதில் 2187 பெண்கள் 1887 – ஆண்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. வளர் இளம் பருவத்தினர் சுகாதார நாள் அனைத்து ஊராட்சி கிராமங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பயனாளி:

வளர் இளம் பருவத்தினர்

பயன்கள்:

இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை