மூடு

தூய்மை பாரத இயக்கம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – முக்கிய நோக்கங்கள்

  • கிராம பகுதிகளில் தூய்மை சுகாதாரம் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • 02 அக்டோபர் 2019-ற்குள் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)-த்தின் குறிக்கோளினை அடைய கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த துரிதப்படுத்துதல்
  • சமூக ஊக்குவிப்பாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுகாதாரம் குறித்து கல்வி மற்றும் விழிப்புணாதர்வுகள் செய்து அப்பகுதிகளில் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்துதல்.
  • பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்தும் பயனுள்ள தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல்.
  • கிராமப்புறங்களில் தூய்மைக்காக திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • தனிநபர் இல்லக் கழிப்பறையினை கட்டி அதனை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு ரூ.12000.00 ஊக்கத்தொகை வழங்குதல் (மத்திய அரசு பங்கு ரூ.7800.00 மாநில அரசு பங்கு ரூ.4200.00)
  • 02/10/2014 அன்று தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) தொடங்கப்பட்டது.
  • தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு விகிதம் 60:40

பயனாளிகளுக்கான தகுதிகள்

  1. குடும்பம் வறுமை கோட்டிற்குள் இருக்க வேண்டும்.
  2. வறுமை கோட்டிற்கு மேல் உள்ள SC / ST சிறு குறு விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள்.
  3. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள், இந்திரா அவாஸ் யோஜனா பயனாளிகள், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு திட்ட பயனாளிகள்.
  4. மேற்கண்ட குடும்பங்களில் ஏற்கனவே மத்திய மாநில அரசு திட்டங்களில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டியதற்கான ஊக்கத் தொகை பெறாத அனைத்து குடும்பங்கள்.

தூய்மை கிராம விருது

தூய்மை கிராமத்திற்கான விருதினை சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அரசாணை எண்: 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நாள்:13/01/2012-ன்படி அறிவிக்கப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் உள்ள தூய்மையான கிராமங்களுக்கு விருதுகள் வழங்கி, அதன் மூலமாக அக்கிராமத்தில் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திட வழிவகை செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தூய்மையான கிராம ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வூராட்சிக்கு ரூ.5.00 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான தகுதிகள்

  • கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு
  • கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 100 சதவீத கழிப்பறை பயன்பாடு.
  • கிராம ஊராட்சியில் திறந்த வெளிமலம் கழித்தலற்ற நிலை இருத்தல் வேண்டும்.
  • கிராம ஊராட்சியில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகம் முழு பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
  • கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் 100 சதவீத மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருத்தல் வேண்டும்
  • வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினை வேளாண்மை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்
  • கிராம ஊராட்சியில் வெளியேற்றப்படும் திட கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மக்கும், குப்பைகளை உரமாக மாற்றிட ஊக்குவித்தல் வேண்டும்.

தூய்மையான கிராம ஊராட்சிக்கு வழங்கப்படும் ரூ. 5.00 இலட்சம் நிதியினை திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கும் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.