மூடு

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய் திட்டம்)

| துறை: கிராமப்புற வளர்ச்சி

குக்கிராமங்களில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கண்டறியப்படும் அடிப்படைத் தேவைகளை தாய் திட்ட நிதியிலிருந்தும், இதர திட்டங்கள் மற்றும் இதர துறை திட்டங்கள் மூலமும் நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

மேற்கொள்ளப்படும் பணிகள்

குக்கிராமம் குறித்த அடிப்படை வசதிகளின் விவரங்களான குடிநீர் விநியோகம் (மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறுமின்விசை பம்புகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள், கைப்பம்புகள்), தெருவிளக்குகள், தெருக்கள் மற்றும் சந்துகள், இடுகாடு / சுடுகாடு> அரசு / உள்ளாட்சி கட்டடங்கள்> அரசு / உள்ளாட்சி பள்ளி கட்டடங்கள்> சிறுகுளங்கள் மற்றும் ஊரணிகள்> விளையாட்டு திடல்கள்> பேருந்து நிலையங்கள்> சந்தைகள்> கிராம ஊராட்சி சாலைகள்> ஊராட்சி ஒன்றிய சாலைகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் இன்றைய தன்மையை அறிந்து அவற்றை மேம்படுத்துவது அல்லது புதிதாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கூடுதல் தேவைப்பணிகளாக அங்கன்வாடி மையம், பொது விநியோக கடை, சுய உதவிக்குழு கட்டிடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர பணிகள்.

கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடும் மாநில அரசைச் சார்ந்தது.

தாய் திட்டம் II – 2016 – 17

குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு 2011-12ம் ஆண்டு முதல் தாய் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தாய்திட்டம் – II 2016-17-ம் ஆண்டின்கீழ் பின்வரும் பணிகள் செயல்படுத்தி வருகிறது.

  • சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தல்
  • தார் சாலைகள் அமைத்தல்
  • அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல்
    1. குடி நீர் பணிகள்
    2. கிராமப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு சிமெண்ட் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் அமைத்தல்
    3. மயானம் மேம்பாடு செய்தல்
    4. மயானத்திற்கு அணுகு சாலைகள் அமைத்தல்

சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தல்

தாய் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிறுபாசன ஏரிகளில் 2016-17-ம் ஆண்டின்கீழ் 62 ஏரிகள் மேம்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இயந்திரங்களின் மூலம் ஏரிகளில் உள்ள முட்புதர்களை அகற்றி தூரி வாரப்பட்டு மதகு மற்றும் கலங்கள் புதிதாக கட்டப்பட்டு கரைகள் பலத்தப்படும். இதனால் சிறுபாசன ஏரிகள் முழு கொள்ளளவினை எட்ட முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகுக்கும்.

அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல்

தாய் திட்டத்தின்கீழ், குக்கிராமங்களில் குடிநீர் பணிகள், தெரு விளக்குகள், அணுகுசாலைகள், இடுகாடு அமைத்தல், இடுகாடு/சுடுகாடு செல்ல சிமெண்ட் சாலைகள் அமைத்தல் ஆகிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. மேலும் சாலைகளின் தரத்தினை மேம்படுத்தவும், மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றும் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயனாளி:

கிராமப்புற மக்கள்.

பயன்கள்:

கிராமப்புற பகுதிக்கு அடிப்படை வசதிகள்