மூடு

பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

கட்டம் I

கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் விதமாக “பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை” 25 டிசம்பர் 2000-ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.

அனைத்து காலங்களிலும் ஆண்டு முழுவதும் உதவக்கூடிய வகையிலும் சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் தொகை 500 உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் சாலைகள் மூலம் இணைக்க இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கட்டம் II

இத்திட்டம் மே-2013-ல் தொடங்கப்பட்டது. மக்களின் போக்குவரத்து மற்றும் சந்தை வசதிக்காக ஏற்கனவே உள்ள கிராம சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. மக்களின் பொருளாதாரம் மற்றும் ஊரக சந்தைகள் மேம்பாடு அடையும் வகையில் இத்திட்டத்தின் மூலம் சாலைகள் அமைக்கப்படுகின்றன.