மூடு

திட்டங்கள்

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்கள் உற்பத்தி/சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் கீழ்…

வெளியிடப்பட்ட தேதி: 11/06/2018
விவரங்களை பார்க்க

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக உற்பத்திபிரிவிற்கு 25 லட்சம் மற்றும் சேவைப் பிரிவிற்கு 10 இலட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள் 18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை ரூ. 5.00 லட்சத்திற்கு மேலான சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கும், ரூ. 10.00 லட்சத்திற்கு மேலான உற்பத்தி சார்ந்த தொழில் திட்டங்களுக்கும் பயனாளி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தில் உற்பத்தி…

வெளியிடப்பட்ட தேதி: 11/06/2018
விவரங்களை பார்க்க

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற் கல்வி படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள் (அ) தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.10 இலட்சம் முதல் ஐந்து கோடி வரை கடனுதவி பெற்று தொழில் துவங்க செய்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கி வேலை வாய்ப்பினை அதிகரிக்கச் செய்வது. திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள் ஐ.டி.ஐ., பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது தொழில் பயிற்ச்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது பயனாளிகளுக்கு வயது வரம்பு 21 வயதிற்கு மேல் அதிகபட்சமாக 35 வரை இருத்தல்…

வெளியிடப்பட்ட தேதி: 11/06/2018
விவரங்களை பார்க்க

நீலப்புரட்சி திட்டம்-மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் திட்டம்

மீன்கள் எளிதில் செரிக்ககூடிய மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புரதம் நிறைந்த அற்புத உணவாகும். சூற்றுச்சூழல் மாசு மற்றும் அதிக மீன்பிடிப்பு காரணமாக இயற்கை நீர்நிலைகளில் மீன்களின் இருப்பு விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையினை எதிர்கொள்ள வேண்டி நீலப்புரட்சி 2020 என்ற திட்டம் மூலம்,ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு முறை மற்றும் நீர்நிலைகளை ஆக்கபூர்வமாகவும், மீன்விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் நிலையான மற்றும் பாதுகாப்பான மீன்வளர்ப்பு முறையினை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள முகமை உறுப்பினர்கள்…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு திட்டம்

உள்நாட்டு மீன்உற்பத்தி கடந்த ஆண்டுகளில் பெரும்பாலும் இந்திய பெருங்கெண்டைகள் மற்றும் இதர வகை சிறு கெண்டைகளை சார்ந்து இருந்து வந்தது.இவ்வகை கெண்டை ரகமீன்கள் நீர்நிலைகளில் முழு வளர்ச்சி அடைய அதிக காலம் எடுக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் நீர்நிலைகள் அனைத்தும் நீர் இருப்பு திறன் கொண்டுள்ளதாலும்,மாவட்டத்தின் மீன் உற்பத்தி திறனினை பெருக்கும் நோக்கத்திலும், தமிழ்நாடு மீன்வளத்துறை குறுகிய காலத்தில் அதிக எடை வளரக்கூடிய கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு விரலிகளை கிருஷ்ணகிரி மீன்பண்ணையில் உற்பத்தி செய்து மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் (வலை மற்றும் பரிசல்) மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர் / மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டும், அவர்களின் வருமானத்தினை அதிகப்படுத்தும் எண்ணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த சுமார் 5000 மீனவர்களுக்கு வலை மற்றும் பரிசல்கள் 50 சதவீதம் மான்யத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினை சார்ந்த பயனாளிகள், அந்தந்த வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர்களை நேரில் சென்று…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்

சிறு,குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.50,000/- பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22,500/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.12,500/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3 மல்பரி தோட்டத்தில் (லேட்டர்ல், பில்டர்) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2 சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை,குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

நவீன புழு வளர்ப்பு தளவாட பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்குத்தல்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புழுவளர்ப்பு மேற்கொள்ள புழுவளர்ப்பு தாங்கிகள் 1200 ச. அடிக்கு மேல் அமைத்தல்வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2 சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள் ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள் தாங்கிகள் அமைத்ததற்கான இரசிது, அசல் ஆவணங்கள்

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு வழங்கப்படும் மானியங்கள்

நிலை 1 (1500 ச.அடிக்குமேல்) = 82,500/- நிலை 2 (1000 முதல் 1500 ச,அடிக்குள்) = 87,500/- நிலை 3 (800 முதல் 1000 ச,அடிக்குள்) = 63,000/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக தனி புழுவளர்ப்புமனை குறிப்பிட்டுள்ள அளவிடுகளின்படி அமைத்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3 மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் (அடிமட்டம், ஜன்னல் அளவு, முழுஅளவு,உள்பகுதி தலா 2,) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம். சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

மல்பரி நடவு மானியம்

ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ.52,500/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 2 மல்பரி தோட்டத்தில் எடுக்கப்பட்ட முழுஉருவ புகைப்படம் தலா 2 சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க