மூடு

புதுயுகம்

| துறை: சுகாதாரம்

தமிழக அரசின் முத்தான புதிய திட்டம்

வளரிளம் பெண்களின் பிரச்சனைகளை மனதில் கொண்டு தமிழக அரசு 10 வயது முதல் 19 வயதுடைய வளர் இளம் பருவ பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கும் ஒரு புதிய திட்டத்தை தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 6 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஒரு பை வீதம் மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

பள்ளி செல்லும் இளம் பெண்கள் பள்ளி ஆசிரியையிடம் நாப்கின்கள் பெற்றுக் கொள்கின்றனர். பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியரிடம் (அ) அங்கன்வாடி பணியாளரிடம் பெற்றுக் கொள்கின்றனர்.

பயனாளி:

10 வயது முதல் 19 வயதுடைய வளர் இளம் பருவ பெண்கள்

பயன்கள்:

விலையில்லா சானிடரி நாப்கின்