மூடு

சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நக்சலைட்டுகளின் பிரச்னைகளை தடுத்திடும் வகையில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டமாக 2003-04ம் ஆண்டு சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முறையே தலா ரூ.700 இலட்சம் மற்றும் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் கட்டுதல், ஆவின் பாலகம் கட்டுதல், வேளாண் கூலி விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் வாங்குதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்தல், அங்கன்வாடி மையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் பல்வேறு பயிற்சித் திட்டங்களும் 2015-16ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டன. 2016-17ம் நிதியாண்டிற்கும் இத்திட்டத்திற்காக ரூ.50.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.