மூடு

கூட்டு பண்ணையம்

தேதி : 28/09/2020 - | துறை: தோட்டக்கலை

கூட்டு பண்ணையத்தின் கருத்து என்னவென்றால், ஒரு சிறிய பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை அடையாளம் கண்டு 20 விவசாயிகளுடன் விவசாயிகள் ஆா்வலா் குழுக்கள் (FIG) அமைப்பது. 5 FIG கள் 100 விவசாயிகளுடன் உழவர் உற்பத்தியாளர் குழுவில் (FPG) ஒருங்கிணைக்கப்படும். கூட்டு சாகுபடி, கடன் வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகளை அணுக உள்ளீடுகளை கூட்டாக வாங்குவது போன்றவற்றை FIG மற்றும் FPG ஊக்குவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 FIG-கள் மற்றும் 30 FPG-கள் கூட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 2020-21 நிதியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் FPG-யின் திட்ட அமலாக்கத் திட்டத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஒவ்வொரு FPG-க்கும் ரூ. 5 லட்சம் கார்பஸ் நிதி வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • சிறு விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • குத்தகைதாரர்களாக இருந்தால், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும்.

பயனாளி:

அனைத்து விவசாயிகளும்

பயன்கள்:

நிதி உதவி

விண்ணப்பிப்பது எப்படி?

பின்வரும் ஆவணங்களுடன் உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்
ஆதார் அட்டை நகல்